என்னைப் பற்றி ...

My photo
Advocate, Author and Academician

Friday 30 December 2011

பலதும் சிலதும் ... வாழ்த்துகள் 2012 !



பல பிரச்சனைகள்,
பல பாதிப்புகள்,
பல போட்டிகள், 
பல சோதனைகள்,
பல வேதனைகள்,
பல எதிர்பார்ப்புகள்,
பல ஏமாற்றங்கள்,
பல தொந்தரவுகள், 
பல துன்பங்கள்,
பல இடர்கள்,
பல இழப்புகள்,
பல நிர்பந்தங்கள்,
பல நிராகரிப்புகள்,
பல தவிப்புகள்,
பல தடுமாற்றங்கள்,
பல சலிப்புகள்,
பல சங்கடங்கள்,
பல சறுக்கல்கள்,
பல அயற்சிகள்,
பல பெயர்ச்சிகள்,

பட்டியல் நீளும் இந்தப்
பலது இருந்தாலும், இடையே,-

சில தீர்வுகள், 
சில வெற்றிகள்,
சில சாதனைகள்,
சில இன்பங்கள்,
சில ஆதாயங்கள்,
சில ஆதரவுகள், 
சில அனுபவங்கள்,
சில கேளிக்கைகள்,
சில ஏற்றங்கள்,
சில நிறைவுகள்,
சில நம்பிக்கைகள்,
சில முயற்சிகள்,
சில முடிவுகள்,
சில சேமிப்புகள்,
சில சேர்க்கைகள்,

இப்படி சிலதும் நடந்தன,
இதோ விடை பெறும் இந்த 2011-இல். 

பலது வந்தாலும்,
சிலது நடந்தாலும்,
சொல்வது யாதெனில்,-
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,
'வா' பார்த்துக் கொள்வோம் என்று
துணிவுடன், தன்னம்பிக்கையுடன்
தளராமல் இருக்கின்றோம்.

எண்களில் ஐந்து
என்பதற்கு எப்போதும்
சிறப்புண்டு, ஏற்றமுண்டு.
புத்தாண்டு 2012-ஐ கூட்டினால்
முத்தாக வருவது ஐந்துதானே?


பலன் தரவரும் 2012
'பல'தை சிலதாக்கி,
'சில'தை பலதாக்கி,
வாழ்வை வளமாக்கி,
வளர்ச்சியை கூட்டி,
இன்பத்தை பெருக்கி,
இல்லத்தை நலமாக்கி,
உள்ளத்தை நல்லதாக்கி,
உற்சாகத்தை வெள்ளமாக்கி,
உயர.. உயர.. உயர்த்த

2012
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
விஷ் யு எ ஹாப்பி நியூ இயர், 2012  !!







Tuesday 27 December 2011

நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க... ?

"கஷ்டம்ன்னா 
கண்ணு தெரியுது.."

நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!

"உங்களை அவங்களோட
இருட்டை விரட்ற
மெழுகுவர்த்தியா
நினைக்கிறாங்கன்னு
பெருமைப்படுங்க"

"காரியம் முடிக்க 
காலைப் பிடிக்கிறான் பாரு"

நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!

"உங்களால மட்டும்தான்
முடியும்ன்னு அவங்க
நம்புறாங்கன்னு
பெருமைப்படுங்க"


"மனுசன்னா கொஞ்சமாவது 
நன்றி விசுவாசம் வேணும் " 

நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!

"தொந்தரவு
தொலைந்து போச்சுன்னு
நிம்மதியா இருங்க"

 "அவங்க செஞ்ச துரோகத்தை 
மன்னிக்க முடியாது"

நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!

"உங்களுக்கு
'பரந்த மனசு' என்பதை
அவங்க உறுதிபடுத்தறாங்க"

ஒன்னு மட்டும் நல்லா சொல்றேன்,- 
"விட்டுக் கொடுப்பவர் 
கெட்டுப் போவதில்லை.
தட்டிக் கொடுப்பவர் 
தாழ்ந்து போவதில்லை."
காத்தோட திசைய மாத்த முடியாது - ஆனா..
காத்துக்கு தோதா சமயம்  பாத்து 
கப்பல் விடலாம் இல்லையா?


இதுதாங்க மேட்டரு,
இனி போடுங்க மீட்டரு !

Monday 26 December 2011

எனக்கு இறக்கை முளைத்து விட்டது !



இருவரும் ஒன்றாகி விட்டோம் என்றாய்,
இணை பிரிய வாய்ப்பில்லை என்றாய்,
இனி எல்லாம் இனிமைதான் என்றாய், எனக்கு 
இறக்கை முளைத்து விட்டது.

பூ வேண்டும் என்றாய்,
பொட்டு வேண்டும் என்றாய்,
மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன், எனக்கு 
இறக்கை முளைத்து விட்டது.

கொலுசு வேண்டும் என்றாய்,
கொண்டு வந்து கொடுத்தவுடன்,
செல்லமாய் சிணுங்கினாய்,  எனக்கு 
இறக்கை முளைத்து விட்டது.

செல்பேசி வேண்டும் என்றாய்,
சென்று வர வாகனம் வேண்டும் என்றாய்,
கொடுத்தவுடன், 'அன்பே' என்றாய், எனக்கு 
இறக்கை முளைத்து விட்டது.

இலகுரக வாகனத்தில் என் இடுப்பை
இலகுவாக பிடித்துக் கொண்டு வந்தாய்,
இன்பமே நீதானென நினைத்தேன், எனக்கு 
இறக்கை முளைத்து விட்டது.

காடுமேடெல்லாம் சுற்றினோம், அயல்
நாட்டிலிருந்து அத்தை மகன் வந்தான்,
சற்றும் நான் நினைக்கவில்லை, அவளுக்கு
இறக்கை முளைத்து விட்டது.


பட்சி பறந்து போச்சு பாஸ் ...!

p/c : https://www.instasaver.org

Saturday 24 December 2011

அருகில் நீ இல்லையே..! - கவிஞர் பிஆர்ஜெ


மலை மீது 
மெல்லப் பனி தழுவ,
குளிருக்கு கம்பளியும்
அனலுக்கு தணலுமிருக்க,
அருகில் நீ இல்லையே..!


மாலை நேரத்து
மலை வாசப் பூக்கள்
வனம் எங்கும்
மணம் பரப்பிச் செல்ல,
அருகில் நீ இல்லையே..!

அந்தி சாய்ந்த காற்றை
சந்திரன் மேலும் குளிரூட்ட
காட்டு மரங்கள் சலசலக்க
உன் நினைவால் மூச்சுத் திணற,
அருகில் நீ இல்லையே..!

மௌனமே பேச்சுத் துணையாக
தனிமையே பெருங் கொடுமையாக
நினைத்த இடமெல்லாம் நீ தெரிய
கனத்த இதயம் கண்ணீர் வடிக்க
அருகில் நீ இல்லையே..! 

அருகில் நீ இருந்திருந்தால்,
பனிக்கு எதற்கு அனல் ?
பூவே என் வசமான பிறகு 
பூ வாசம் எதற்கு ?

மரங்களின் சலசலப்பு, உன்
கலகல சிரிப்பால் அடங்குமே!


அருகில் நீ இருந்திருந்தால்,
என் மூச்சே நீதானே, பிறகு
நான் எதற்கு திணற?
உன் பேச்சே வரம்தானே,
நான் சாபவிமோசனம் பெற.
என் தனிமை இனிமையாகிவிடுமே!

- கவிஞர் பிஆர்ஜெ



Related Posts Plugin for WordPress, Blogger...